தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை - ஏராளமான வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் கவலை
May 27 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையுடன் கூடிய சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
தேனி மாவட்டம் டி-வாடிப்பட்டி, கன்னியமங்கலம், ஜம்புலிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தாயாராக இருந்த கற்பூரவள்ளி, ரஸ்தாளி, பூவன் ரக வாழை மரங்கள், சூறாவளிக் காற்றால் சாய்ந்து சேதமடைந்தன. ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றிற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.