தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.8.09 கோடி வசூல் - காவல்துறை தகவல்
May 27 2020 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக, 8 கோடியே 9 லட்சத்து 28 ஆயிரத்து 684 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4 லட்சத்து 25 ஆயிரத்து 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக, 5 லட்சத்து 3 ஆயிரத்து 535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.