கிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை
May 28 2020 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு வழிமுறைகளில் ஒன்றாக, கிருமிநாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவியை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில் மற்றும் கண்டுபிடிப்பு முனையத்தின் மாணவர்கள் இணைந்து கொரோனா நோய்தடுப்பு வழிமுறைகளில் ஒன்றாக, கிருமிநாசினி வழங்கும் கருவியினை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகளால் தொடாமல் கிருமி நாசினியை உபயோகிக்க முடியும். இக்கருவியை உருவாக்கிய மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.ராஜேந்திரன் வெகுவாகப் பாராட்டினார். இக்கருவியினை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள், உறுப்பு கல்லூரிகள் மற்றும் வளாகத்தில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு.ராஜேந்திரன் தெரிவித்தார்.