மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் - சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை
May 28 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வெட்டிவேரால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை காவலர்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுவது தொடர்பாக இந்த ஆண்டு 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாஞ்சா நூல் பட்டம் விடுவோர், தயாரிப்போர், வாங்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.