சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகே சலூன்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

May 28 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகே சலூன் கடைகளைத் திறக்‍க நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க தமிழக அரசுக்‍கு உத்தரவிடக்‍கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் திரு.முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முடிதிருத்த தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், தொழிலாளர் ஒவ்வொருவருக்‍கும் தலா 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது.

சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடையை திறக்க அரசு உரிய நடவடிக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, வழக்‍கு விசாரணை வரும் 8ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00