மணப்பாறையில் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 வண்டிகளை சிறைபிடித்த இளைஞர்கள்

May 28 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, நள்ளிரவில் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை இளைஞர்கள் சிறைபிடித்தபோதிலும் உரிய நேரத்தில் அதிகாரிகள் வராததால், மின்னல் வேகத்தில் வாகனத்தை இயக்கி, மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.

மணப்பாறை பகுதியில் உள்ள காட்டாறுகளில் தொடர்ந்து மணல் மற்றும் கிராவல் மண் திருட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு, மணப்பாறை அருகேயுள்ள பெரியபட்டி ஆற்றில் ஜேசிபி மூலம் லாரியில் கிராவல் மண் அள்ளப்படுவது குறித்து அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, சம்பவ இடத்திற்குச் சென்று 2 வண்டிகளையும் சிறைப்பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மணப்பாறை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் வரவில்லை. அப்போது, இளைஞர்கள் அசந்த நேரம் பார்த்து, இருவண்டிகளின் ஓட்டுனர்களும் வண்டிகளை மின்னல் வேகத்தில் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00