ஆம்புலன்ஸ் வசதி செய்து தராத சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் : சிகிச்சை முடிந்து 50 கி.மீ தூரம் நடந்தே சென்ற நோயாளி
May 28 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர், 50 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தவாறு தனது வீட்டிற்குச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
சேலம் ஓமலூரை அடுத்த பஞ்சுகாளிப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவர், குடும்ப பிரச்னை காரணமாக கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நல்லதம்பியை வீட்டிற்குச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அப்போது தனது வீட்டிற்குச் செல்ல நல்லதம்பி ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்காததால், அரசு மருத்துவமனையில் இருந்து, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்தே செல்லத் தொடங்கினார்.