உயிரிழந்த தாய் பசுவிற்காக கண்ணீர் விட்டு அழுத கன்றுக்குட்டி
May 28 2020 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில், உயிரிழந்த தாய் பசுவைக் கண்டு, கன்றுக்குட்டி கண்ணீர் விட்டு அழுத காட்சி, கண் கலங்க வைத்தது. கடந்த 10 நாட்களாக தாய் பசு, உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாட்டுப் பட்டியில் நின்றுகொண்டிருந்த பசு, தீடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது. துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த பசுங்கன்று, தாய்ப் பசு உயிரிழந்ததைக் கண்டு, கண்ணீர் விட்டு அழத்தொடங்கியது.