கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு
May 28 2020 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று ரயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 515 பேர், உணவு, குடிநீரின்றி தவித்து வந்த நிலையில், ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காங்கிரஸ் புலம் பெயர்வோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.