நீதிமன்றங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் - தலைமை நீதிபதிக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்
May 30 2020 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதிமன்றங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்கக்கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பொது ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மட்டும் சில முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. எனவே சில கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. வகுப்புவாத அமைப்புகள் நீதிமன்ற வளாகங்களில் மருத்துவ முகாம் நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.