ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்கள், உபகரணங்கள் வழங்குவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பொய்ப்பிரச்சாரம் - காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க சக கட்சியினரே போர்க்கொடி
May 30 2020 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கி வருவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமதி, விஜயதரணி எம்.எல்.ஏ பொய் பிரச்சாரம் செய்கிறார் என அக்கட்சியினரே புகார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான திருமதி விஜயதரணி, தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் ஆயிரம் கிலோ அரிசி, காய்கறி, மாஸ்க் கொடுத்து வருவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி சம்பந்தபட்ட தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தலைமை இந்த பொய் பிரச்சாரம் தொடர்பாக எம்.எல்.ஏ. திருமதி விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.