தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
May 30 2020 2:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், வரும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 1ம் ஒன்றாம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக திரு. பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெப்பநிலையை பொறுத்தவரையில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருத்தணி பகுதியில் அடுத்த 24 நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என திரு. பாலசந்திரன் கூறியுள்ளார்.