கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென குவிந்த வெட்டுக்கிளி கூட்டம் - வாழை, ரப்பர் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் அச்சம்
May 30 2020 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் வீயன்னூர் அருகே வாழை, ரப்பர் பயிர்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதம் செய்து வருகின்றன. பிற மாநிலங்களுக்கு இவை படையெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீயன்னூர் அருகே வெட்டுக்குழி முளவிளை பகுதியில் தாமஸ் அபிரகாம் என்பருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் வெட்டுகிளிகள் அதிகளவில் காணப்படுகின்றன. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் ரப்பர் பயிர்களையும் அவை அழிக்க தொடங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.