முகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
May 30 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.