கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை
May 30 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த சோகத்தில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த மார்ச் 23ம் தேதி மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்த இளம்தம்பதியர், சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.