சென்னை தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்கு நோய் தொற்று
May 31 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் 13 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 13 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 589 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 709 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 557 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 136 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 494 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 180 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 846 பேருக்கும், அடையாறில் 773 பேருக்கும், அம்பத்தூரில் 550 பேருக்கும், திருவொற்றியூரில் 439 பேருக்கும், மாதவரத்தில் 345 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருங்குடியில் 241 பேரும், சோழிங்கநல்லூரில் 234 பேரும், ஆலந்தூரில் 195 பேரும், மணலியில் 203 பேரும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.