தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் திடீர் உயிரிழப்பு : சக பணியாளர்கள் அதிர்ச்சி
May 31 2020 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் திடீரென உயிரிழந்த சம்பவம், சக பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு காவல்ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராமச்சந்திரன், இன்று வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை மற்ற பணியாளர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.