கன்னியாகுமரியில் வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை - நிவாரணம் வழங்க கோரிக்கை
May 31 2020 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியில் வாழைத்தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம், பல ஆயிரம் மதிப்புள்ள வாழைகளை சேதப்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே சிற்றார் அணைபகுதியில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்களும் வாழைத்தோட்டங்களும், அன்னாசிபழதோட்டங்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து யானைகள் கூட்டமாக வந்து, ஒட்டனூர் பகுதியில் வாழைத்தோட்டத்தில் புகுந்து வாழைகளை அழித்தது. இரண்டாவது நாளாக நேற்றிரவு மீண்டும் நுழைந்த யானை கூட்டம், அஞ்சுகண்டரை பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து பல ஆயிரங்கள் மதிப்புள்ள வாழைகளை மிதித்தும் துதிக்கையால் அப்புறப்படுத்தியும் சேதப்படுத்தியது. யானையால் அழிக்கப்பட்ட வாழைகளுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், வனவிலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை காக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.