தமிழக-கர்நாடக எல்லையில் காய்கறி வண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.51 லட்சம் பறிமுதல்
May 31 2020 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக-கர்நாடக எல்லை வழியாக காய்கறி வண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்தருந்த 51 லட்சம் ரூபாயை, கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காய்கறி ஏற்றி செல்லும் வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, காய்கறி கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பெட்டிகளுக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.