திருச்சியில் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை : அ.தி.மு.க நிர்வாகியின் தந்தை கைது
May 31 2020 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த அதிமுக நிர்வாகியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்திற்கு இடமாக இருந்த பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தபோது, மதுபான பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக அதிமுக இளைஞர் இளம்பெண்கள் மாவட்ட பொருளாளர் ராஜாவின் தந்தையும், கடை விற்பனையாளருமான பாண்டிராமு என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.