கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி
May 31 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 4 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் துபாய், அபுதாபி நாடுகளிலிருந்து வந்த கர்ப்பிணிப் பெண்கள் ஆவர். மேலும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணி புரிந்த ஊழியர்களில் 2 பெண்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திரும்பிய நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது.