சிவகங்கையில் மதுக்கடைகளில் காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி : கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படுவதாக மக்கள் அச்சம்
May 31 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அக்கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கடையில் மதுபானங்களை வாங்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிகின்றனர். விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கப்படாமலும், மதுபிரியர்கள் கடைகளில் நிற்பதாகவும், கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் திருப்பத்தூர் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.