ஜெயங்கொண்டத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மனைவி உயிரிழப்பு : கணவரிடம் போலீசார் விசாரணை
May 31 2020 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ராஜாக்கொல்லை தெருவைச் சேர்ந்த பரணிதரன் நேற்று இரவு பதற்றத்துடன் காணப்பட்டதால் சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயந்தி இறந்து கிடந்துள்ளார். உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையறிந்த பரணிதரன் காவல்நிலையதிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார். தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று ஜெயந்தியின் தாயார் புகார் அளித்ததால் போலிசார் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர். கணவர் பரணிதரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.