தமிழகத்திலிருந்து தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 147 தென்கொரிய பயணிகள்
May 31 2020 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்கு சுற்றுலா வந்து தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்த, 147 தென்கொரிய நாட்டினர், சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, சென்னையில் சிக்கியிருந்த மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல்வேறு சுற்றுலாப் பயணிகள் அவர்களது தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து 38 குழந்தைகள், 51 பெண்கள் உட்பட 147 தென்கொரிய நாட்டினர், சென்னையில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.