மதுரையில் டேங்கர் லாரியில் பால் வீணாகி தரையில் கொட்டப்படும் சம்பவம் : அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
May 31 2020 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்படும் பால் வீணாகி, தரையில் கொட்டப்படும் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் உள்ள பால் பண்ணைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது டேங்கர்களிலிருந்து பால் வெளியேறி வீணாகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கணக்கீடு செய்யப்பட்டு வாங்கப்படும் நிலையில், இவ்வாறு வீணாவது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.