வெள்ளாற்று படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல்-போலீசார் விசாரணை
May 31 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பகுதியில் உள்ள வெள்ளாற்று படுகையில், மணல் திருட்டு நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் சு.ஆடுதுறை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த அனுச்சந்திரன் என்பவர், புதியதாக வாங்கிய டிராக்டரில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அனுச்சந்திரனை கைது செய்த போலீசார், 9 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.