சென்னை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தென்சென்னை வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி கழகத்திற்குட்பட்ட VGA நகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.வ.சுகுமார்பாபு மதிய உணவு வழங்கினார். இதில், 105-வது வட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சிவகுமார், மகளிரணி வட்டச் செயலாளர் திருமதி.சித்ரா, பகுதிக்கழக செயலாளர் திரு.குணசேகரன், மகளிரணி செயலாளர் திருமதி.N.விஜயா, வட்டச் செயலாளர் திரு.கலையரசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் அமமுக சார்பில், தேவாலா பொன்வயலில் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கழகம் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகளை, நகர செயலாளர் திரு.சையது அனுப்கான், கழக பாசறை மாவட்ட செயலாளர் திரு.நஸ்ருதீன், மாவட்ட பொருளாளர் திரு.தினேஷ், மாவட்ட தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் திரு.அபுதாகீர் உள்ளிட்டோர் வழங்கினர்.
சேலம் மத்திய மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திரு.செ.வெங்கடாஜலம், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, அரிசி, கோதுமை, காய்கறி முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். கழக நிர்வாகி திரு.சங்கர் ஏற்பாட்டில், வழங்கப்பட்ட பொருட்களை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் சென்றனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம், குடிமங்கலம் ஓன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெதப்பம்பட்டி பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஓன்றிய செயலாளர் திரு.சிவானந்தம் கபசுர குடிநீரை வழங்கினார். சோமவாரபட்டி ஊராட்சி செயலாளர் திரு.தேவராஜ், குடிமங்கலம் ஓன்றிய துணைச் செயலாளர் திரு.காளிஸ்வரன், குடிமங்கலம் ஓன்றிய மீனவர் அணி செயலாளர் சிந்திலுப்பு திரு.கருப்புசாமி, குடிமங்கலம் ஓன்றிய தகவல் தொழிற்நுட்ப பொறுப்பாளர் திரு.பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், அம்பத்தூர் பகுதி 84-வது வட்ட கழகம் சார்பில், கொரட்டூர், பிராமணர் தெரு ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள், முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.K.A. மலைமேகம், அம்பத்தூர் பகுதி கழகச் செயலாளர் திரு.S.வேதாசலம், மாவட்ட அவைத்தலைவர் திரு.எஸ். கே.கோவிந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.வி.ஜெயஸ்ரீ பிரியா, 84-வது வட்டக் கழக செயலாளர் திரு.எஸ்.கே.ஜீ. சுரேஷ் குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாக, மாதவரம் முருக்கம்பேடு, புதுஅருள் நகர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.K.A. மலை மேகம், மாதவரம் தெற்கு பகுதி கழக செயலாளர் திரு.ஸ்ரீதர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.A. முகமது அனிபா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் திரு.என்.பிரகாஷ் ராஜ், மாவட்ட துணை செயலாளர் திரு.கிரி பாபு, 24- வது வட்ட கழக செயலாளர் திரு.எ.தயாநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
நெல்லை மாவட்ட அமமுக சார்பில், சங்கரன்கோவிலில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஏ.பி.பால் கண்ணன், கழக மாநில புரட்சித்தலைவி தொழிற்சங்க பேரவை பொருளாளர் நெல்லை திரு.பரமசிவம் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சங்கரன்கோவில் நகர செயலாளர் திரு.முப்புடாதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகர மாவட்ட பொருளாளர் திரு.ஜோதி ராஜ், நெல்லை மாநகர மாவட்ட புரட்சித் தலைவி தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.ஆவின் அண்ணாசாமி, மேலநீலித நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் திரு.அமிதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சங்க திடல், புலிகுத்தி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கழக செயலாளர் தேர்போகி திரு.V.பாண்டி, சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.கார்த்திக், கல்லல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அசோகன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.