திருச்சியிலிருந்து 2 பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்
May 31 2020 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மாத்தூர் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 61 தொழிலாளர்கள் 2 தனியார் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். நாடு முழுவதும் கொரொனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில், திருச்சியை அடுத்த மாத்தூர் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அங்கு இருந்து 2 தனியார் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.