சென்னை மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை - 13 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்

Jun 1 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூபாய் 13 லட்சம் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், MMDA காலனி பகுதியில், தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை, ஏ.டி.எம் மையத்தின் காவலாளி வெளியே அமர்ந்து கொண்டிருந்த போது, மையத்திற்குள் ஒருவர் பணம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பையுடன் வந்த மர்ம நபர், ஏ.டி.எம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கூறி, உள்ளே சென்றுள்ளார். உள்ளே பணம் எடுத்துக் கொண்டிருந்தவர் ஓரமாக நிற்க, அந்த மர்ம நபர் சாவியை பயன்படுத்தி, இயந்திரத்தை திறந்து அதில் இருந்த 13 லட்ச ரூபாய் பணத்தை தன் பையில் எடுத்துவைத்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனை அருகில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர், காவலாளியிடம் தெரிவித்தபோது கிருமி நாசினி தெளிக்க வந்தது, கொள்ளையன் என்பது தெரியவந்தது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00