திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
Jun 1 2020 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியையான விஜய கௌரி. இவரது மகன் விஜயகுமார் என்பவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் மகனின் உடல்நிலை மோசமானதைக் கண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய கௌரி , அவரது 2 மகள்கள் ஆகியோர் பெரும் சோகத்தில் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு இவர்களது வீட்டிலிருந்து எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் விஜயகுமாரின் சடலத்துடன் தாய் விஜய கௌரி, மகள்கள் விஜயவாணி, விஜயலட்சுமி ஆகிய 3 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், மகன் இறந்த விரக்தியில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.