தமிழகத்தில் 22 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் ஆயிரத்து 149 பேருக்கு தொற்று உறுதி
Jun 1 2020 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் பதிவானது இதுவே முதல் முறை ஆகும். இதனால் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 993-லிருந்து 14 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 757 பேர், நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.