சென்னையில் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கிறது - காவல் துறை ஆணையர் அறிவிப்பு
Jun 2 2020 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் 144 தடை உத்தரவை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து, பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.