ராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள்
Jun 2 2020 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வாளுடன் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மணலூர் கிராமத்தில், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தடைசெய்யப்பட்ட வாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டியதை டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்குமாருக்கு, புகாருடன் வந்தது.
இதையடுத்து, மணலூர் கிராமத்திற்கு சென்ற போலீசார், 144 தடை உத்தரவை மீறியதுடன், அச்சுறுத்தும் வகையில், பட்டா கத்தியில் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 10 பேரை கைது செய்தனர்.