கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து தொடங்கியது - 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
Jun 2 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கொரோனா தடை உத்தரவால் தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீங்கலாக நேற்று பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. நிர்வாக காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இயக்குவதற்கு பதிலாக இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகர்கோவில் பணிமனையில் இருந்து 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பயணிகள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் இன்னும் அகற்றப்படாததால். அங்கு பேருந்துகள் நிறுத்தப்படவில்லை. மாறாக நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரி பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது.