ரேஷன் கார்டு வைத்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக வெளியான தகவல் - கூட்டுறவு சங்க வங்கிகளை முற்றுகையிட்ட மக்கள்
Jun 2 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ராஜுவின் பேச்சை நம்பி 50 ஆயிரம் ரூபாய் கடன்கேட்டு குடும்ப அட்டையுடன் கூட்டுறவு வங்கிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜூ, குடும்ப அட்டை இருந்தால் போதும் 50 ஆயிரம் தனிநபர் கடன் வழங்கப்படும் எனவும், அதனை 100 நாட்கள் கழித்து தவணை முறையில் செலுத்தலாம் என மதுரையில் செய்தியாளரிகளிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரின் இந்த பேச்சை நம்பி, இன்று மதுரை மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக ஏராளமான பொதுமக்கள். சிறுவணிகர்கள் கடன்கேட்டு குடும்ப அட்டையுடன் குவிந்தனர். ஆனால், வங்கி அதிகாரிகள் அப்படி ஒரு திட்டம் இல்லை என கூறியதோடு தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 100க்கும் மேற்பட்டோர், வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொய்யான வாக்குறுதி அளித்த தமிழக அரசுக்கும், அமைச்சரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.