சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்குகிறது
Jun 2 2020 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள மண்டலங்களில், ராயபுரத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 15 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 867 பேருக்கும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 651 பேருக்கும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 867 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.