தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறல் - இதுவரை 9 கோடியே 53 லடசம் ரூபாய் அபராதமாக வசூல்
Jun 2 2020 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், இதுவரை 9 கோடியே 53 லட்சத்து 53 ஆயிரத்து 424 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 69 நாட்களில், 5 லட்சத்து 69 ஆயிரத்து 578 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 5 லட்சத்து 32 ஆயிரத்து 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 40 ஆயிரத்து 843 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், 9 கோடியே 53 லட்சத்து 424 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.