பெரம்பலூர் நகர அமமுக மாணவரணி செயலாளர் படுகொலைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - கொடூர கொலை சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்

Jun 3 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் நகர அமமுக மாணவர் அணி செயலாளர் திரு.ஆர்.பாண்டி என்கிற வல்லத்தரசு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்திருப்பதாகவும், இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகர கழக மாணவர் அணி செயலாளர் திரு.ஆர்.பாண்டி என்கிற வல்லத்தரசு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார். வல்லத்தரசுவின் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன - இதுபோன்ற கொடூர கொலைச்சம்பவங்கள் இனி நடக்காதவாறு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கழகப் பணியிலும், கொரோனா நிவாரண உதவிகள் வழங்குவதிலும் துடிப்போடு செயல்பட்டு வந்த தம்பி பாண்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00