தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்‍கக்‍கோரிய வழக்‍கு - அரசு முடிவில் தலையிட முடியாது என கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை

Jun 3 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்‍கக்‍கோரிய வழக்‍கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் மனஉளைச்சலுக்‍கு ஆளாகியிருக்‍கும் சூழலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்‍க மாட்டார்கள் என்று தெரிவித்தார். சி.பி.எஸ்இ. தேர்வு ஜுலையில்தான் நடத்தப்படுகிறது. எனவே 10ம் வகுப்பு தேர்வை இம்மாதமே நடத்துவதை ஒத்திவைக்‍க வேண்டுமென மனுவில் கேட்டுக்‍கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.பி.என். பிரகாஷ், திரு.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, தேர்வை தொடர்ந்து ஒத்திவைத்தால் மாணவர்களிடையே அச்சம் அதிகரிக்‍கும் என்றும், தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்‍கை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00