சென்னை அருகே செங்கல் சூளையில் கற்கள் சரிந்து விழுந்து விபத்து - வடமாநில பெண் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
Jun 3 2020 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே செங்கல் சூளையில் கற்கள் சரிந்து விழுந்து வடமாநில பெண் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த 107 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று காலை செங்கற்களை லாரியில் ஏற்றும் பணியில் 18 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது கற்கள் சரிந்து விழுந்ததில், மதனா மற்றும் பரிமளா ஆகிய இருவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.