ஏ.டி.எம்.மில் திருடப்பட்ட பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசார் : பணத்தை மீட்ட போலீசாருக்கு வங்கி ஊழியர்கள் பாராட்டு
Jun 3 2020 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏ.டி.எம்.மில் திருடப்பட்ட எட்டரை லட்சம் ரூபாயை மீட்டுக்கொடுத்த மதுரவாயல் காவல் நிலைய போலீசாரை, வங்கி ஊழியர்கள், மாலை அணிவித்து பாராட்டினர்.
மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் உள்ள தனியார் ஏடிஎம்மிற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கிருமிநாசினி தெளிப்பதுபோல் சென்ற மர்ம நபர், கள்ளச்சாவி போட்டு, 8 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றார். சிசிடிவி பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டதில், பணத்தை திருடியவர், அதே வங்கியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சிவானந்தம் என்பதும், தற்போது அம்பத்தூர் கிளையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், பணத்தையும் பறிமுதல் செய்தனர். பணத்தை மீட்டுக்கொடுத்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் சுதாகர், கோபால் உள்ளிட்டோருக்கு, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து, மாலை அணிவித்து பாராட்டியதுடன், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.