சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது
Jun 3 2020 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி, திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவிலிருந்து எம்-சாண்ட் மணலை எடுத்துவர, வெங்கடேசன் என்பவர், திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கவரைப்பேட்டையில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் உணவருந்த சென்றிருந்தபோது, லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். லாரியின் செல்ப் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால், லாரி தீப்பிடித்து எரிந்தது, விசாரணையில் தெரியவந்தது.