கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்ட 1,300 புலம்பெயர் தொழிலாளர்கள்
Jun 3 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ஆயிரத்து 300 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலம், மேற்குவங்க மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அவர்களுக்கு உணவு அளித்தனர். கன்னியாகுமரியில் இருந்து, பீகார், ராஜஸ்தான், அசாம், உத்தரபிரதேசம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு, சுமார் 4 ஆயிரத்து 300 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.