தென்மேற்கு பருவமழை எதிரொலி - குமரியில் பரவலாக மழை : அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு
Jun 3 2020 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. நாகர்கோவில், குழித்துறை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை நிலவியது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கும் காலம் என்பதால், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, இந்த பருவ மழை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.