தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு
Jun 4 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று மேலும் ஆயிரத்து 286 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872-ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் முதன்முறையாக, ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நோய்த்தொற்று உள்ளோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 208-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கும், காஞ்சிபுரத்தில் மேலும் 19 பேருக்கும், திருவள்ளூரில் மேலும் 58 பேருக்கும், தூத்துக்குடியில் மேலும் 17 பேருக்கும், திருவண்ணாமலையில் மேலும் 16 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.