சென்னை அருகே ஊரடங்கை பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள் திருட்டு - இரண்டு இளைஞர்கள் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்
Jun 4 2020 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் லாகவமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும், அசீசுர் ரஹ்மான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்துள்ளார். காலையில் எழுந்து வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நள்ளிரவில் இரு இளைஞர்கள் அப்பகுதியில் நோட்டமிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர்.