2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் - பாறை, சீலா உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி
Jun 4 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மீனவர்கள் இரண்டு மாதங்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற நிலையில், பாறை, சீலா, நெத்திலி உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடி துறை முகத்தில் மட்டும் ஊரடங்கு காரணமாக அரசு விதித்த விதிமுறைகள் நடைமுறை படுத்த சிக்கல் இருபதாக கூறி மீனவர்கள மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 400 விசைப்படகுகளும் சுழற்சி முறைகளில் தினசரி 150 படகுகள் இயக்கலாம் என்ற முடிவின் படி, நேற்று முதல் மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். காலையில் சென்ற மீனவர்கள் இரவில் கரை திரும்பினார்கள். கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்களுக்கு பாறை, சீலா, நெத்திலி உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்தது. அவற்றை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.