கன்னியாகுமரியில் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்
Jun 4 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். குளச்சலில் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற அதிமுக நகர செயலாளர் ரூபின் தலைமையில் ஏராளமானோர் கட்சியில் இருந்து விலகி அமமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. செந்தில் முருகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். கிழக்கு மாவட்ட இணை செயலாளர் திருமதி அம்மு ஆன்றோ, மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.