கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து படையெடுக்கும் வண்டுகள் - அச்சப்படத் தேவையில்லை என தோட்டக்கலைத் துறை தகவல்
Jun 4 2020 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து படையெடுக்க தொடங்கியுள்ள வண்டுகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன்னஹள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில், ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும், அவை பயிர்களை தாக்காது என்றும் உறுதிப்படுத்தினர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் மே வண்டுகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் திரு.மோகன்ராம், தலைமையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதத்தில் வருவதால் இந்த வண்டுகளுக்கு மே வண்டுகள் என பெயர் உள்ளது எனவும், இதனால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் திரு.மோகன்ராம் தெரிவித்தார்.