சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா - அடையாறு மண்டலத்திலும் நோய்த்தொற்று ஆயிரத்தைக் கடந்தது
Jun 4 2020 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய விபரங்களை மண்டல வாரியாக காண்போம்.
தலைநகர் சென்னையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்து 224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 93 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 29 பேரும், தேனாம்பேட்டையில், 2 ஆயிரத்து 14 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 798 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 525 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறில் ஆயிரத்து 7 பேரும், வளசரவாக்கத்தில் 939 பேரும், அம்பத்தூரில் 651 பேரும், திருவொற்றியூரில் 610 பேரும், மாதவரத்தில் 431 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் 306 பேரும், பெருங்குடியில் 301 பேரும், ஆலந்தூரில் 261 பேரும், மணலியில் 246 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.